×

சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒருவர் சரணடைந்தார்

 

சிவகங்கை, டிச. 9: சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய நபர் சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிவகங்கை தாகூர் தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(26). இவர் சிவகங்கை அருகே உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நவ.12 அன்று பி.வேலாங்குளத்தில் நடைபெற்ற உறவினர் இறந்த நிகழ்ச்சியில் சரத்குமாரின் அண்ணன் ஐயப்பன் என்பவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்ப்பதற்காக சரத்குமார் சென்ற நிலையில் அங்கிருந்த எதிர் தரப்பினர் சரத்குமாரை தாக்குவதற்காக விரட்டி சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பி டூவீலரில் சரத்குமார் சென்றபோது பின்னால் ஒரு காரில் விரட்டிச் சென்ற அந்த கும்பல் சிவகங்கை வந்தவாசி ரோட்டில் வல்லனி பஸ் ஸ்டாப் அருகே அவர் மீது மோதி கீழே விழுந்தவரை காரை ஏற்றி கொலை செய்தனர்.

இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பி.வேலாங்குளத்தைச் சேர்ந்த அழகு சுந்தரம்(36), வெற்றி வேந்தன்(23), ராஜவேல்(43), தென்னரசு(52), தேவேந்திரன்(53), ராகேஷ்(27), மேல வாணியங்குடியைச் சேர்ந்த நரேந்திரன்(31) கீழக்கண்டனியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன்(32)ஆகிய 8பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலவாணியங்குடியை சேர்ந்த கண்ணன்(21) சிவகங்கை ஜேஎம்1 கோர்ட்டில் சரண் அடைந்தார்.

The post சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒருவர் சரணடைந்தார் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா