×

குத்தாலம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய வணிகர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 

குத்தாலம்,டிச.9: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சி சார்பில் சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக தலைநகரம் மிகவும் பாதிப்பு அடைந்ததை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி, தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குனரின் வழிகாட்டுதல் படி குத்தாலம் பேரூராட்சி சார்பாக வணிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நிவாரண பொருட்கள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க சுமார் 2 லட்சம் மதிப்பீடு உள்ள மளிகை பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் இருப்பிடத்தற்கு தேவையான பொருட்கள் ஆர்வத்துடன் வழங்கினார்.

வழங்கப்பட்ட பொருட்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கபட்டது. இதனை தொடர்ந்து ஆர்வத்துடன் பங்களிப்பு வழங்கிய வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன், துணைத் தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் ஒவ்வொரு கடைக்கும் சென்று நன்றி தெரிவித்து கடிதம் வழங்கினார்.

The post குத்தாலம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய வணிகர்களுக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kutthalam Municipality ,Kutthalam ,Mijam ,Chennai ,Mayiladuthurai ,District ,Kutthalam Municipal Corporation ,
× RELATED கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி:...