×

கொடிநாள் நிதி வழங்கிய ஆட்டோ டிரைவர் கலெக்டர் பாராட்டு

நாகர்கோவில், டிச.9 : நாகர்கோவில் டி.வி.டி காலனியை சேர்ந்த 41 வயது நிரம்பிய ஆட்டோ டிரைவர் கோபிநாத் என்பவர், கொடிநாள் நன்கொடையாக தான் ஆட்டோ ஒட்டி சேமித்த ரூ.1880 ஐ கலெக்டர் தரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் மேஜர் ஜெயகுமார் (ஓய்வு), கிராமிய கலைஞர் பழனியாபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஒட்டுநர் கோபிநாத் கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் படை வீரர்களின் நல வாழ்விற்காக கொடிநாளில் நன்கொடை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொடிநாள் நிதி வழங்கிய ஆட்டோ டிரைவர் கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kodinal ,Nagercoil ,Gopinath ,DVD Colony ,Nagercoil, Kodinal ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...