×

ஓலைப்பாடியில் 20ம்தேதி மக்கள் நேர்காணல் முகாம்: முன்னேற்பாடாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

 

கும்பகோணம்,டிச.9: கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சியில் 20ம்தேதி மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் பங்கேற்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சியில் வரும் 20ம்தேதி மக்கள் நேர்காணல் முகாம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னேற்பாடாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெறுவதற்கு சிறப்பு முகாம் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சங்கர் தலைமையில் ஓலைப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 20ம்தேதி வரை இந்த பகுதியில் உள்ள அனைவரும் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பிரசாத், தனி வட்டாட்சியர் முருககுமார், மண்டல துணை வட்டாட்சியர் பிரபு , வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற பணியாளர்கள், உள் பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓலைப்பாடியில் 20ம்தேதி மக்கள் நேர்காணல் முகாம்: முன்னேற்பாடாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Olaipadi ,Kumbakonam ,Olaipadi panchayat ,Kapistalam ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி