×

கொரடாச்சேரியில் இருந்து சென்னைக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

நீடாமங்கலம், டிச. 9: கொரடாச்சேரி முதல் நிலை பேரூராட்சியிலிருந்து சென்னைக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முதல்நிலை பேரூராட்சி சார்பில் சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயலுக்காக நிவாரண பொருள்கள் பொதுமக்களிடம் சேகரித்து பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி செல்வக்குமார் தலைமையில் சென்னைக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

செயல் அலுவலர் உஷா, துணைத்தலைவர் தளபதி முன்னிலை வகித்தனர். நிவாரண பொருட்களாக மாதுளை பழங்கள், ஆப்பிள்கள், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள், அரிசி, துணி சோப்புகள், குளியல் சோப்புகள், பிஸ்கட் பாக்கெட்கள், ரஸ்க் பாக்கெட்கள், பிரஸ்,பேஸ்ட், மருந்து பொருள்கள், பாராசிட்டாமல் மாத்திரை, டைஜின் மாத்திரை உள்ளிட்ட ரூ.63,௦70 மதிப்பிலான பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கொரடாச்சேரியில் இருந்து சென்னைக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Koradacherry ,Chennai ,Needamangalam ,Thanjavur… ,
× RELATED தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை