×

தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய லோக் அதாலத் நடைபெறவுள்ளது. உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சாதாரண குற்ற வழக்குகள் உள்ளிட்ட வை லோக் அதாலத்தில் தீர்த்து வைக்கப்படவுள்ளன. அதேபோல், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் என மொத்தம் 467 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 52,304 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

The post தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத் appeared first on Dinakaran.

Tags : National Lok Adalat ,Tamil Nadu ,Chennai ,High Court Madurai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...