×

தனியார் பள்ளிகளை திறக்க கூடாது: மெட்ரிக் இயக்குநர் உத்தரவு

சென்னை: புயலால் பாதிப்படைந்த 4 மாவட்டங்களில் இயங்கும் தனியார் பள்ளிகளை இன்று திறக்கக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் மழை குறைவாக பெய்கின்ற காரணத்தால் அங்கு அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பாதிப்புள்ள 4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் இயங்காத நிலையில் தனியார் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளிகளை இன்று திறக்கக் கூடாது என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

The post தனியார் பள்ளிகளை திறக்க கூடாது: மெட்ரிக் இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Matriculation Schools ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…