- மீ.
- மகுவா
- மொயித்ரா பி.
- மோடி அரசு
- ஷு. வெங்கடேசன் எம். பி.
- சென்னை
- மொய்த்ரா
- வெங்கடேசன் எம் .பி.
- மகுவா மொய்த்ரா
- எம். பி. மோடி அரசு
- ஷு.
- வெங்கடேசன்
- மீ ஆ.
சென்னை: மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மகுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் லோக்சபாவில் இன்று அதிரடியாக நிறைவேறியது. இதனையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர்கட்சி எம்பி மகுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம் எனப் பதிவிட்டுள்ளார்.
The post மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியுள்ளது மோடி அரசு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.