×

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வேளச்சேரி அம்பேத்கர் நகரில் நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் எ.வ. வேலு..!!

சென்னை: வேளச்சேரி அம்பேத்கர் நகரில் அமைச்சர் எ.வ. வேலு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பிஸ்கட், பால், பால் பவுடர், பாய், போர்வை, பழ வகைகள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

5வது நாளாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேளச்சேரி அம்பேத்கர் நகரில் அமைச்சர் எ.வ. வேலு நிவாரண உதவி வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான வேளச்சேரி அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் பாலாஜி நகர், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 12,000 பிரேட் பேக்கெட்டுகள், 11,600 பால் பவுடர் பேக்கெட்டுகள், 5,600 அரிசி மூட்டைகள், 70,000 பிஸ்கட் பேக்கெட்டுகள், 14,100 குடிநீர் பாட்டில்கள், 5,200 மெழுகுவர்த்திகள், 6000 தீப்பெட்டிகள், 1000 போர்வைகள், 17,000 இனிப்பு பன்களை அமைச்சர் எ.வ.வேலு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழங்கினார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: வேளச்சேரி அம்பேத்கர் நகரில் நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் எ.வ. வேலு..!! appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,VELACHERI AMBEDKAR ,MINISTER A. ,Chennai ,Minister ,Velu ,Tamil Nadu ,Damage ,Ambedkar ,City ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...