சென்னை : சென்னை அடையாரில் உள்ள ஆவின் பாலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது. நேற்று அதிகபட்சமாக 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சோளிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் என மழையால் பாதிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.,”என்றார்.
The post மக்களிடம் Panic Buying இன்று இல்லை : பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் appeared first on Dinakaran.