×

தஞ்சாவூரில் இருந்து திருப்பத்தூருக்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 250 டன் அரிசி அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், டிச.8: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக நேற்று சரக்கு ரயிலில் திருப்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் அரிசி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து திருப்பத்தூருக்கு 250 டன் அரிசி 5 வேகன்களில் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 1,000 டன் நெல் லாரிகளில் பொது விநியோகத் திட்டத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரில் இருந்து திருப்பத்தூருக்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 250 டன் அரிசி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tiruppattur ,Thanjavur district ,
× RELATED தஞ்சாவூரில் இருந்து...