×

முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் திருடியவர் கைது

திருப்புத்தூர், டிச. 8: திருப்புத்தூர் அருகே காரையூரை சேர்ந்தவர் முருகேசன் (56). இவரது மகள் சரண்யா (29). சரண்யா தனது தந்தையிடம் நேற்று முன்தினம் மாலை தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். திருப்புத்தூர் செம்மொழி பூங்கா எதிரே உள்ள வங்கிக்கு வந்து அருகில் இருந்தவரை பணம் எடுத்து தருமாறு முருகேசன் கூறியுள்ளார். அப்போது அவர் ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி விட்டு பணம் இல்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் சில மணி நேரத்தில் முருகேசனின் கார்டை வைத்து அவர் ரூ.10,000 பணம் எடுத்ததாக சரண்யாவின் போனிற்கு மெசேஜ் வந்துள்ளது. இதுகுறித்து சரண்யா நேற்று திருப்புத்தூர் நகர் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ பாஸ்கரன் வழக்குப்பதிந்து ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து விசாரணை செய்தார். இதில் திருப்புத்தூர் அருகே திருவிடையார்பட்டியை சேர்ந்த ஜெயபாக்கியம் (44) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பணத்தை மீட்டனர்.

The post முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Murugesan ,Karaiyur ,Saranya ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது