×

வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி மீன்பிடி தொழிலாளி மீது தாக்குதல்

 

நித்திரவிளை, டிச.8: நித்திரவிளை அருகே தூத்தூர் மருத்துவமனை பகுதியை சேர்ந்தவர் சபரியார் அடிமை (66). மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று காலை மனைவியுடன் ஒரு மரண ஆராதனைக்கு ஆலயத்துக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த டெனிஸ்டன் (55), என்பவர் பேச வேண்டும் என்று சபரியார் அடிமையை அழைத்து உள்ளார். அதேவேளையில் மனைவி செலின்மேரி ஆலயத்துக்கு சென்று உள்ளார்.

தொடர்ந்து டெனிஸ்டன் எனது அண்ணன் மீது உள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சபரியார் அடிமையிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், டெனிஸ்டன் கல்லால், சபரியார் அடிமை தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சபரியார் அடிமையை நெஞ்சில் ஏறி நின்று மிதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சபரியார் அடிமை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் டெனிஸ்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி மீன்பிடி தொழிலாளி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Nithravilai ,Sabariar Adhus ,Thoothur Hospital ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு