×

நாகராஜா கோயில் உண்டியலில் ரூ.5.5 லட்சம் காணிக்கை

 

நாகர்கோவில், டிச. 8: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் 11 உண்டியல் உள்ளன. பக்தர்கள் வருகையை ெபாறுத்து 2 மாதம், 3 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது. நேற்று நாகராஜாகோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்தது. அறநிலைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர் தங்கம், ஆய்வாளர் சரஸ்வதி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் மேலாளர் ராமசந்திரன், கணக்கர் சிதம்பரம் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 421 கணிக்கையாக கிடைத்து இருந்தது. இதனை தவிர மூன்றரை பவுன் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவைகளும் உண்டியலில் இருந்தது.

The post நாகராஜா கோயில் உண்டியலில் ரூ.5.5 லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nagaraja ,Nagarkot ,Nagaraja temple ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...