×

படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்: கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

 

நாகர்கோவில், டிச.8: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் அரசு முன்னாள் படைவீரர்களுக்கு, அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது.

கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவி வாரி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மேஜர் ஜெயகுமார்(ஓய்வு), நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கண்ணன், அலுவலர்கள், பணியாளர்கள், முன்னாள் படை வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்: கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Veterans ,Day ,Collector ,Sridhar ,Nagercoil ,Kumari District Collector ,
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை