×

அம்பத்தூர் பால் பண்ணையை சூழ்ந்திருந்த தண்ணீர் முற்றிலும் அகற்றம்..தட்டுப்பாடின்றி பால் விநியோகம்..!!

சென்னை: தொடர் மழையால் முடங்கி இருந்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மீண்டும் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. 4 மாவட்டங்களை புரட்டியெடுத்த மிக்ஜாம் புயலால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி இருப்பதால் பால் விநியோகத்தில் தடங்கல் எற்பட்டது.

மேலும் கனமழை காரணமாக அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் அந்த வழியாக ஊழியர்களோ, பால் ஏற்றி செல்லும் வாகனமோ செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் தேங்கி இருந்த தண்ணீர் முற்றிலுமாக அகற்றப்பட்டு ஆவின் பால் பண்ணையில் முழுவீச்சில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

The post அம்பத்தூர் பால் பண்ணையை சூழ்ந்திருந்த தண்ணீர் முற்றிலும் அகற்றம்..தட்டுப்பாடின்றி பால் விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Ambattur ,farm ,CHENNAI ,Ampathur ,Dinakaran ,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு