×

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், தமிழ்நாட்டுக்குத் தேவையான நிவாரண நிதியை பெற்றுத் தர ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு விரைவில் வரவுள்ளது என்று தெரிவித்தார்.

The post புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...