×

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு; 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கினார் நடிகர் பாலா!

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நடிகர் பாலா ரூ.1,000 நிதி வழங்கி உதவியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல முன்னணி பிரபலங்களே செய்யாத செயல்களை நடிகர் பாலா மக்களுக்காக செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நடிகர் பாலா நிதி உதவி செய்துள்ளார். சென்னை வரலாறு காணாத மழை, வெள்ளத்தை சந்தித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வுக்கு திரும்ப இன்னும் சில காலம் ஆகும். அந்த அளவுக்கு சென்னையை புரட்டி போட்ட புயலால் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

என்னதான் உணவு, குடிநீர் என உதவிகள் செய்தாலும் அன்றாடம் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழும் மக்கள் நிலைமை மோசமாகதான் உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் பாலா புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சம் நிதி உதவி செய்துள்ளார். பெரிய பெரிய பிரபலங்களே செய்ய தவறிய உதவியை வளர்ந்து வரும் நடிகர்கள் செய்வது மக்கள மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. நடிகர் பாலா மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், முதியோர் இல்லத்திற்கு உதவி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவு என பல உதவிகளை செய்து அசத்தி வருகிறார்.

 

The post சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு; 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கினார் நடிகர் பாலா! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Actor ,Bala ,Cyclone Mikjam ,Mikjam ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...