×

அசாம் மாநிலம் கவுகாத்தியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவு

திஸ்பூர்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாம், கவுகாத்தியில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

The post அசாம் மாநிலம் கவுகாத்தியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Mild ,Gawathi, Assam ,Thispur ,Gawukathi, Assam ,Assam ,Gawathi ,Dinakaran ,
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்