செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பெற்றோர் தவற விட்டுச் சென்ற 2 குழந்தைகளை ரயில்வே போலீசார் மீட்டனர். செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் நேற்று இரவு பயணித்த 2 பேரும் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். தனியாக சுற்றித்திரிந்த சகோதரிகள் ஹாசினி(6), லித்திகா(5) மீட்கப்பட்டு தாம்பரம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் கார்த்திகேயன் மற்றும் தீபிகா என்று குழந்தைகள் ரயில்வே போலீசிடம் கூறியுள்ளனர். இருப்பிடம் பற்றிய எந்த தகவலும் குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாததால் பெற்றோரிடம் ஒப்படைக்க முடியவில்லை.
The post கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பெற்றோர் தவற விட்டுச் சென்ற 2 குழந்தைகள் மீட்பு..!! appeared first on Dinakaran.