×

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானது

சென்னை: பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் 80% மின்விநியோகம் சீரானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னையில் எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் 20% மின்விநியோகம் செய்யப்படவேண்டும். பெரும்பாக்கத்தில் ஒரு சில பகுதிகளிலும், புளியந்தோப்பு குக்ஸ் சாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

The post வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Perumbakkam ,Semmanchery ,Pallikarana ,MKP Nagar ,North Chennai ,Dinakaran ,
× RELATED தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக...