×

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்


உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி நிவாரண உதவிகள் வழங்கினார். உத்திரமேரூர் அருகே வயலூர் நரிக்குறவர் காலனி பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளாக அரிசி, காய்கறி, உணவு உள்ளிட்ட தொகுப்பினை வழங்கி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவு அடைந்து கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீரினை அமைச்சர் பார்வையிட்டு, வெளியேறும் உபரிநீர் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரநிதிகள் பலர் உடனிருந்தனர்.

The post புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Uthramarur ,Minister ,Shri. ,Muthusamy ,Vailur Narikuravvar ,Uttaramur ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...