×

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த நரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தேவராஜ் (13). அதேப் பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரது மகன் ஆனந்தன் (9) ஆகிய இரு சிறுவர்களும் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்தனர். அப்போது, நீச்சல் தெரியாத சிறுவர்கள் தண்ணீரில் அலறியதை பார்த்தவர்கள் சிறுவர்களையும் மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் இறந்த சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Narapakkam village ,Devaraj ,Nandagopal ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்