×

காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார்

* பல்வேறு அரசியல் கட்சிகள் மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தையொட்டி, அமைச்சர் முத்துசாமி உட்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வீட்டு வாசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர்கள் குமார், படு நெல்லி பாபு, பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள், முத்துசெல்வன், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைப்பு செயலாளர்கள் வாலாஜா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம் சோமசுந்தரம், வள்ளிநாயகம், மாநகர பகுதி செயலாளர், பாலாஜி ஜெயராஜ், ஸ்டாலின் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நிர்வாகிகள் மகேஷ், அருள், உமாசங்கர், ராமானுஜம், சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இ.கமயூ கட்சி சார்பில் காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், நிர்வாகி கமலநாதன் தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்கம் சார்பில் அமைப்பின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோன்று, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோகன், வரதராஜன், நடராஜன், தமிழ்ச்செல்வன், ஏழுமலை, பன்னீர்செல்வம், தெய்வசிகாமணி, பாலகிருஷ்ணன், வெங்கடேசன், பர்ணபாஸ், செல்வமணி, முகிலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Ambedkar ,DMK ,Kanchipuram ,Muthusamy ,
× RELATED அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்