×

புளியந்தோப்பில் வெள்ளநீரில் மிதந்த பெண் உடல் மீட்பு

பெரம்பூர்: சென்னையில் புயலால் இரண்டு நாட்களாக செய்த கனமழையின் காரணமாக சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பிகா ஓட்டல் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் தண்ணீரில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியாததால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழையில் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டாரா அல்லது இவருக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏதாவது உள்ளதா, உயிரிழந்த நபர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புளியந்தோப்பில் வெள்ளநீரில் மிதந்த பெண் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Pulianthop ,Perampur ,Chennai ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு