×

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2024ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பு வோரின் விண்ணப் பங்களை வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க 20.12.2023 கடைசிநாள். விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) “HAJ SUVIDHA” செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது.

குறைந்தபட்சம் 31.01.2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

The post ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Backward, Backward and Minority Welfare ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...