×

நெல்லை அருகே திருமண விவகாரம் அக்கா வெட்டி கொலை: போலீசில் தம்பி சரண்

நெல்லை: நெல்லை அருகே குடும்ப தகராறில் அக்காவை அரிவாளால் வெட்டி கொன்ற தம்பி போலீசில் சரணடைந்தார். நெல்லை அருகே தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்பாண்டி (எ) ராஜ் (53). இவரது மகள் தங்கத்தாய் (20), பிளஸ் 2 படித்து முடித்து விட்டு கங்கைகொண்டான் சிப்காட்டிலுள்ள பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர், அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் நட்பாக பேசி வந்தார். இந்நிலையில் தங்கத்தாய்க்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அந்த மாப்பிள்ளை எல்லாம் பிடிக்கவில்லை என்று தங்கத்தாய் மறுத்து வந்துள்ளார்.

இதனால் தங்கத்தாய்க்கும் அவரது தம்பி முத்துவுக்கும் (18) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்றிரவு தங்கத்தாய், முத்து மற்றும் பெற்றோர் சாப்பிட்டு முடித்தனர். தங்கத்தாயின் திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் திருமணம் வேண்டாம் என தங்கத்தாய் கூறியுள்ளார். இதனால் அவருக்கும், முத்துவுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முத்து, தங்கத்தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே இருந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் தங்கத்தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து காதல் காரணமாக தங்கத்தாய் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முத்து, தாழையூத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லை அருகே திருமண விவகாரம் அக்கா வெட்டி கொலை: போலீசில் தம்பி சரண் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Saran ,Tharyuthu ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...