×

பார்முலா 4 கார் பந்தயத்தை டிசம்பர்.15, 16 தேதிகளில் நடத்த திட்டம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை டிசம்பர்.15, 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. டிச.9, 10 தேதிகளில் நடைபெறவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சென்னையில் கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்கக் கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ் உட்பட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கார் பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post பார்முலா 4 கார் பந்தயத்தை டிசம்பர்.15, 16 தேதிகளில் நடத்த திட்டம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Formula 4 car ,Tamil Nadu Govt ,ICourt ,Chennai ,Tamil Nadu government ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...