×

மழை வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த கர்ப்பணி, முதியவர்கள் படகுகள் மூலம் மீட்பு: மாநகர போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: சென்னை வடபழனி தசரதபுரத்தில் மழை வெள்ளத்தில் கர்ப்பணி பெண் ஒருவர், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படாமல் அவதிப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசார் படகு மூலம் கர்ப்பணி பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உரிய நேரத்தில் போலீசார் உதவி செய்ததால் கர்ப்பணி பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது.  அதேபோல், ராயப்பேட்டையில் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல முடியாத மூதாட்டி ஒருவரை போலீசார் பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுபோல் கனமழையிலும் போலீசார் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களை பாதுகாப்பாக மீட்டனர். இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post மழை வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த கர்ப்பணி, முதியவர்கள் படகுகள் மூலம் மீட்பு: மாநகர போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Garbhani ,CHENNAI ,Vadapalani Dasarathapuram, Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...