×

மின்வயர் அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி

கரூர்: மின்சார வயர் அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள தூளிப்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார்(23). ட்ரில்லிங் ஆப்ரேடடர். இவர், கடந்த 1ம்தேதி,வெள்ளியணை அடுத்த ஒத்தம்பட்டி பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த போர்வெல் லாரி, மேலே சென்ற மின்சார வயர் மீது மோதியது. இதில், எதிரபாராதவிமாக மின்சார வயர் அறுந்து விழுந்து நந்தகுமார் மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி நந்தகுமார் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் நந்தகுமாரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மின்வயர் அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,Nandakumar ,Dhulipatti ,Velliana ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...