×

கரூர் உழவர் சந்தை அருகே இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கரூர்: கரூர் உழவர் சந்தை அருகே இரண்டு சக்கர வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் உழவர் சந்தை வழியாக செல்கிறது. இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்கிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த பகுதியின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உழவர் சந்தை போன்ற பகுதிக்கு வரும் பொதுமக்கள், சாலையோரம் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலையில், அவ்வப்போது சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, வாகன நிறுத்தம் குறித்து கண்காணித்து முறைப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். விண்ணப்பங்களை, மேலாளர், மாவட்ட பசுமை, மாயனூர், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The post கரூர் உழவர் சந்தை அருகே இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Karur Farmer's Market ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...