×

குடிநீரில் குளோரின் அதிகரிக்க முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை:தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குடிநீரில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீரில் வழக்கமாக உள்ள 0.5 பிபிஎம் அளவுக்கு குளோரினைவிட கூடுதலாக 1 பிபிஎம் குளோரின் கலக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், டேங்கர் லாரிகள் போன்றவற்றில் 2 பிபிஎம் குளோரின் கலக்கவும் அரசு உத்தரவிட வேண்டும். பொதுமக்களை சென்றடையும்போது குடிநீரில் 1 பிபிஎம் அளவு இருப்பதை உறுதி செய்ய, ‘குளோரோ ஸ்கோப்’ கருவி மூலம் சோதனை நடத்தவும் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடிநீரில் குளோரின் அதிகரிக்க முஸ்லிம் லீக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Muslim League ,Chennai ,Tamil Nadu Muslim League ,president ,VMS ,Mustapha ,Dinakaran ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...