×

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

அரியலூர், டிச. 3:அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் வேல்முருகன் (33) என்பவரும் அவரது பெரியப்பா மகளான அனுபிரியா என்பவரும் சேர்ந்து கடந்த அக்டோபர் 29ம்தேதி வடகடல் மேலத் தெருவைச் சேர்ந்த அனுப்பிரியாவின் கணவர் சுரேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவர் உடலை சாக்கில் கட்டி வேல்முருகனின் இருசக்கர வாகனத்தில் வைத்துக் கடத்திக் கொண்டு வந்து வெண்மான்கொண்டான் பிரிவுப்பாதை அருகில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரித்தோப்பில் மறைத்து வைத்துள்ளனர்.

மறுநாள் அதிகாலையில் வேல்முருகன் அவ்விடத்திற்கு சென்று சுரேஷின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இது தொடர்பாக உடையார்பாளையம் காவல் நிலையத்தில் அக்டோபர் 30ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இருவரும் நவம்பர் 6ம் தேதி கைது செய்யப்பட்டு வேல்முருகன் திருச்சி மத்திய சிறையிலும், அனுபிரியா திருச்சி மகளிர் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேல்முருகன் சுரேஷை கொலை செய்து அவரது உடலை பொது இடத்தில் வைத்து எரித்து பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய காரணத்தால் அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி உடையார்பாளையம் வட்டக் காவல் ஆய்வாளர் தனபாலன் பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வேல்முருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து நேற்று அதற்கான ஆணைப் பிரதிகள் திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

The post குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Manivel ,Velmurugan ,Alavai village ,Udayarpalayam circle ,Ariyalur district ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...