×

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 3: ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி. ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையில் 2007ல் இந்தியா கையெழுத்திட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிக்கான உரிமைகளை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி மதுரையில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெத்தானியாபுரம் அண்ணா மெயின்வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட உதவி தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர், கவுன்சிலர் குமரவேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணை மேயர் நாகராஜன் நிறைவுரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,International Day of Disabled Persons ,United Nations ,Dinakaran ,
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது