×

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 65 பேர் கைது: உத்தரபிரதேச ஸ்பா மையங்களில் அதிரடி

காசியாபாத்: உத்தரபிரதேச ஸ்பா மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த இந்திராபுரத்தில் செயல்படும் சில ஸ்பா மையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படைகளை அமைத்தனர். இந்நிலையில் இந்திராபுரத்தில் செயல்படும் சந்தேகத்துக்குரிய ஆறு ஸ்பா மையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அரைகுறை ஆடையுடன் ஜாலியாக இருந்த 65 இளைஞர்கள் மற்றும் பெண்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இவர்கள் 65 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, அவர்களுக்கு என்று தனியாக பஸ் வரவழைக்கப்பட்டது. இவர்களில் 2 ஸ்பா மைய உரிமையாளர்கள் மற்றும் 4 மேலாளர்களும் அடங்குவர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்பா மையங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

The post பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 65 பேர் கைது: உத்தரபிரதேச ஸ்பா மையங்களில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Ghaziabad ,Dinakaran ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு