×

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்..என் மதிப்புக்குரிய நண்பர், கி.வீரமணிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டுவருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்..என் மதிப்புக்குரிய நண்பர், கி.வீரமணிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Periyar ,Ky ,Kamalhassan ,Veeramani ,Chennai ,President ,Dravidar Association ,G. Veeramani ,People's Justice Mayam Party ,Peryaar ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...