×

அழகு நிலைய பூட்டை உடைத்து திருடியவர் கைது

தூத்துக்குடி, டிச. 2: தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு மனைவி, மணிநகர் பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். கடந்த 29ம் தேதி இந்த அழகு நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ₹22 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து ராஜபிரபுவின் மனைவி நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில் மேலதட்டப்பாறை வடக்கு தெருவைச் சேர்ந்த சேர்ந்த மருதன் மகன் சுடலைமணி(53), அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து மத்தியபாகம் எஸ்ஐ இசக்கியப்பன் சுடலைமணியை கைது செய்தார். மேலும் இவரிடம் இருந்து ₹5 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

The post அழகு நிலைய பூட்டை உடைத்து திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Rajaprabhu ,Tutickudi Doovipuram ,Maninagar ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது