×

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி பாசன நிலங்களுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணை

சென்னை: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 03.12.2023 முதல் 31.03.2024 வரை 120 நாட்களுக்கு, 7776.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

The post பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி பாசன நிலங்களுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணை appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Thadapally ,Chennai ,Arakkankottai ,Thadappalli ,Erode District ,Thadapalli ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது