×

சென்னை மாதவரம் கொசப்பூர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் விழுந்த சிறுவன் மாயம்!

சென்னை: சென்னை மாதவரம் கொசப்பூர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் விழுந்த 19 வயது சிறுவன் மயமாகியுள்ளான். டான் பாஸ்கோ சீர்திருத்த பள்ளியில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறுவன் சந்தோஷை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கால்வாயில் விழுந்ததில் காணாமல்போன சிறுவன் சந்தோஷை, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். நண்பர்களுடன் அமர்ந்திருந்த சந்தோஷ், வழுக்கி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை மாதவரம் கொசப்பூர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் விழுந்த சிறுவன் மாயம்! appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Madhavaram Kosapur ,Chennai ,Don Pascoe ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...