×

சென்னையில் 6.4 கிலோ தங்கம் கொள்ளை: மும்பையில் தலைமறைவாகி இருந்த நகை பட்டறை ஊழியர்கள் இருவர் கைது!!

சென்னை: சென்னை தியாகராய நகர் நகை பட்டறையில் 6.4கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் மும்பையில் தலைமறைவாகி இருந்த கடை ஊழியர்கள் இருவரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது. சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தெருவில் நந்தகுமார் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். அந்த கடையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நகை பட்டறையில் கடந்த 27ம் தேதி சுமார் 6.4 கிலோ அளவிற்கு உருக்கிய தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இது குறித்து நகை பட்டறை உரிமையாளர் நந்தகுமார் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் உருக்கப்பட்ட நகையைத் திருடிச் செல்வது தெரியவந்தது. மேலும் நகை பட்டறையில் பணிபுரிந்து வந்த 6 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவுக்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையடிக்கப்பட்ட 6.4 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் 6.4 கிலோ தங்கம் கொள்ளை: மும்பையில் தலைமறைவாகி இருந்த நகை பட்டறை ஊழியர்கள் இருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Thiagaraya Nagar ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!