×

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கல்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: கல்பாக்கத்தில் அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், இன்று காலை மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இதையடுத்து, 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கோகிலமேடு, புதுப்பட்டினம் மீனவர் குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தற்போது கலப்பாக்கத்தில் உள்ள கடலின் சீற்றம் 5அடி முதல் 6அடிக்கு எழுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கல்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Kalpakkam ,Chengalpattu ,Andaman Sea ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...