×

கன்னியாகுமரியில் ₹10 ஆயிரம், ஆவணங்களை தவறவிட்ட சுற்றுலாபயணி கண்டெடுத்து ஒப்படைத்த திமுக பிரமுகர்

கன்னியாகுமரி டிச. 1: தெலங்கானா மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் ஜ்வாலித்துவ்வு என்பவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அவர் நேற்று கடற்கரை சாலையில் தனது கைப்பையை தவற விட்டார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்து விட்டு, தனது நண்பர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே நேற்று காலை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்த கன்னியாகுமரி பேரூராட்சி உறுப்பினரின் கணவரும் தி.மு.க. பிரமுகருமான ஆனந்த் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் இந்த கைப்பையை கண்டெடுத்தனர். தொடர்ந்து அதில் இருந்த ஆவணங்கள் மூலம் சுற்றுலா பயணிக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் திரும்பி வந்து, தவற விட்ட தனது கைப்பை மற்றும் அதில் இருந்த பணம், ஆவணங்களை ஆனந்திடம் பெற்றுக் கொண்டார். இந்த செயலை சுற்றுலாபயணிகள் பாராட்டினர். அப்போது, பேரூராட்சி உறுப்பினர் பூலோகராஜா, ஆன்றனி உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post கன்னியாகுமரியில் ₹10 ஆயிரம், ஆவணங்களை தவறவிட்ட சுற்றுலாபயணி கண்டெடுத்து ஒப்படைத்த திமுக பிரமுகர் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,DMK ,Jwalithuvu ,Kakinada, Telangana ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?