×

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகள் பூட்டி சீல் வைப்பு

திருவாரூர், டிச. 1: திருத்துறைபூண்டி பகுதிகளில் 4 கடைகளில் விற்பனை செய்து வந்த பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் அந்த 4 கடைகளுக்கும் சுகாதார துறையினர் பூட்டி சீல் வைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லு£ரி அருகே 2 கடைகளிலும் மற்றும் புனித தெரசா மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு கடையிலும் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு கடையிலும் என மொத்தம் 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த 4 கடைகளும் சுகாதார துறையினர் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், டி.ஜி.பி உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பான்மசாலா பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலும் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 30 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதேபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகள் பூட்டி சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Panmasala ,Gutka ,Tiruthurapoondi ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...