×

பஸ் கவிழ்ந்து மாணவர்கள் 27 பேர் காயம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று காலை திருப்பூரில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர், மேட்டுப்புதூர் வளைவில் வேகமாக திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறிக் கவிழ்ந்தது. இதில் 4 மாணவிகள், ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 22 பேர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் கவிழ்ந்து மாணவர்கள் 27 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dudupathi ,Perundurai ,Dinakaran ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு