×

பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்: இயக்குநர் சமுத்திரக்கனி காட்டம்

சென்னை: எந்த பொதுவெளியில் அமர்ந்து அமீர் குறித்து எகத்தாளமாக பேசினீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் சமுத்திரக்கனி காட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். அந்த பேட்டியில் பேசிய ஞானவேல், பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் அதிகமாக கணக்கு காட்டி என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார்.

பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும். ஆனால், அவர் அதனை திருடி சம்பாதிக்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார். பருத்தி வீரன் படப் பிரச்சனையில் அமீர் பற்றி ஞானவேல் ராஜா முன்வைத்த விமர்சனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இயக்குனர்கள் பாரதிராஜர், சமுத்திரக்கனி, சசிகுமார், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து கண்டனம் வலுத்த நிலையில் அமீர் பற்றிய பேச்சுக்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், எந்த பொதுவெளியில் அமர்ந்து அமீர் குறித்து எகத்தாளமாக பேசினீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் சமுத்திரக்கனி காட்டமாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சமுத்திரக்கனி வெளியிட்டுள்ள செய்தியில்,

பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால் சேற்ற வாரி இறைச்சிங்களோ…அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்.

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா.. கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. “அப்புறம் ” பருத்திவீரன் திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்…அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே!”

காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி.!

என்று சமுத்திரக்கனி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

The post பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்: இயக்குநர் சமுத்திரக்கனி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Samuthirakani Kattam ,Chennai ,Aamir ,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...