×

இலவச வேட்டி- சேலைகள் தயார் வடவள்ளியில் பரிதாபம் தாய் திட்டியதால் மாணவர் தூக்கில் தற்கொலை

தொண்டாமுத்தூர்,நவ.30: தாய் திட்டியதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை வடவள்ளி அருகே கல்வீரம்பாளையம் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். கட்டிடத்தொழிலாளி. இவர்களுக்கு ப்ரியா, தினேஷ்(15) என இரு குழந்தைகள் உள்ளனர். மகள் ப்ரியா திருமணமாகி கனுவாய்‌ பகுதியில் வசித்து வருகிறார். தினேஷ் கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை இவரது தாய் தினேசை திட்டியதாக தெரிகிறது. மனமுடைந்து போன தினேஷ் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டின் சமையலறையின் விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடித்து வந்து பார்த்த போது தூக்கில் தொங்கிய மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.‌அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து வடவள்ளி காவல்நிலையத்தில் அவரது தாய் தீபா கொடுத்த புகாரின்‌ பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலவச வேட்டி- சேலைகள் தயார் வடவள்ளியில் பரிதாபம் தாய் திட்டியதால் மாணவர் தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vadavalli ,Thondamuthur ,Kalveerampalayam ,Vadavalli, Coimbatore ,
× RELATED கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!