×

அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

விராலிமலை, நவ.30:அன்னவாசல்,இலுப்பூர்,விராலிமலை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விற்பனைக்கு இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்டிக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து அதிக விலைக்கு வாடிக்கையாளருக்கு விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது விராலிமலை அருகே உள்ள வேலூர் பெட்டி கடை ஒன்றில் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட நாகராஜன் (48), அன்னவாசல் காலடிப்பட்டி சத்திரம் பெட்டி கடையில் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சதீஷ்குமார்(30), இலுப்பூர் நவம்பட்டியில் உள்ள பெட்டி கடையில் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட வடிவேலு(44) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விற்பனைக்காக இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viraalimala, Ilupur, Annawasal ,Viralimalai ,Tamil government ,Annawasal ,Ilupur ,Viraalimala, Ilupur, ,Annavasal ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா