×

நாகர்கோவிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், நவ. 30: நாகர்கோவில் புன்னைநகர் அருகே குருசடி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர், ஜீப் டிரைவர் டினு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 16 பிளாஸ்டிக் பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபகழக குடோனில் ஒப்படைத்தனர்.

The post நாகர்கோவிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Agastheeswaram circle ,Kurusadi ,Punnainagar ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...