×

கடையில் பொருட்கள் திருட்டு

நெல்லை, நவ. 30: பாளை அருகேயுள்ள முன்னீர்பள்ளம், பிராஞ்சேரியைச் சேர்ந்தவர் சேகர் (42). அம்பை மெயின் ரோட்டில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு டீக்கடையை பூட்டி விட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கேஸ் ஸ்டவ், மேஜை, பொருட்கள் வைக்கும் சில்வர் பிரேம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சேகர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கடையில் பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nellie ,Shekhar ,Prancheri, Munneerpallam ,Palai ,Ambai ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...