×

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 18 மசோதா தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி டிச.22ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஷ்மீர் குடியேறியவர்கள், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முயற்சியின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் பலத்தை 107 லிருந்து 114 ஆக உயர்த்தும் மசோதாவை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், 2023-24ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல்பகுதி உள்பட 18 மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 18 மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,New Delhi ,Union government ,Parliamentary Winter Session ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை